கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக மருந்தில்லாத வெறும் ஊசியை செலுத்திய செவிலியர்..!

Published by
Sharmi

பீகாரில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறும் ஊசியை மட்டும் செலுத்தியுள்ளார் செவிலியர் ஒருவர். 

பீகார் மாநிலம் சப்ரா நகரில் கொரோனா தடுப்பூசி மையம் சில நாட்களுக்கு முன் நடைபெற்றுள்ளது. அந்த மையத்திற்கு இரு நண்பர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்துள்ளனர். தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த நண்பர்களில் ஒருவர் செலுத்தும் போது மற்ற ஒருவர் அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். வீட்டிற்கு வந்தவுடன் அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஏனென்றால், அங்கு ஒருவருக்கு வெறும் மருந்தில்லாத ஊசியை செலுத்தியுள்ளனர். உடனே அவரது நண்பருக்கு தொடர்பு கொண்டு உனக்கு தடுப்பூசியே செலுத்தவில்லை, அதில் இருந்த தடுப்பூசியில் மருந்து இல்லை. காலியாக இருந்த ஊசி என்று தெரிவித்துள்ளார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் அந்த நபர் தெரிவித்துள்ளார். வீடியோவில் தடுப்பூசி செலுத்தும் போது காலியாக இருந்த ஊசியை செலுத்தும் காட்சி பதிவாகியிருப்பது குறித்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

இதன் பிறகு விசாரணை நடத்திய அதிகாரிகள் இந்த செவிலியரை தற்போது தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தவில்லை என்று கூறியுள்ளனர். மேலும், அந்த வெறும் ஊசி செலுத்தப்பட்ட நபருக்கு தடுப்பூசி மறுபடியும் செலுயுள்ளார்களா..? என்பதை பற்றி தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

Published by
Sharmi

Recent Posts

தமிழகத்தில் (27.09.2024) வெள்ளிக்கிழமை இந்த இடங்களில் மின்தடை!

தமிழகத்தில் (27.09.2024) வெள்ளிக்கிழமை இந்த இடங்களில் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

5 hours ago

திருப்பதி பிரம்மோற்சவம்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து…

5 hours ago

நவராத்திரி ஸ்பெஷல்..புதுசா கொலு வைக்கப் போறீங்களா?. அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு  வைப்பது எப்படி என இந்த…

6 hours ago

ஐபிஎல் 2025 : தோனி இடத்துக்கு இவர் தான்! இந்த வீரருக்கு போட்டி போடும் சென்னை, பெங்களூரு?

சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…

6 hours ago

சென்னையில் குளுகுளு.. 5 நாட்களுக்கு இடி-மின்னலுடன் மழை.!

சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…

6 hours ago

லட்டு சர்ச்சை., சிறப்பு பூஜை செய்யலாம் வாங்க.! அழைப்பு விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…

6 hours ago