பீகாருக்கு திரும்பி வரும் மாணவர்களுக்கான கட்டணத்தை ரெயில்வேக்கு பீகார் அரசு கொடுத்துவிடும் என முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறினார்.
இந்தியாவில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கடந்த 40 நாள்களுக்கு மேலாக உள்ளது. இதனால், பிழைப்புக்காகவும், படிக்கவும் தங்கள் மாநிலங்களில் இருந்து வெளிமாநிலங்களில் சென்று பலர் படித்தும், வேலை செய்து வருகிறார்கள். தற்போது ஊரடங்கு காரணமாக அவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த சூழலில் வெளிமாநிலங்களிலிருந்து மாணவர்கள், தொழிலாளர்கள் பலர் நடந்தும், சைக்கிள் மூலமாகவும் தங்கள் சொந்த ஊர் செல்கின்றனர்.
இதனால், பிற மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக, மத்திய அரசு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், வெளிமாநிலங்களில் இருந்து பீகாருக்கு திரும்பி வரும் மாணவர்களுக்கான கட்டணத்தை ரெயில்வேக்கு பீகார் அரசு நேரடியாக கொடுத்துவிடும் என கூறினார்.
இதற்கு முன் சிறப்பு ரெயிலில் வரும் தொழிலாளர்கள் தங்களை 21 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டால் ரூ.1000 வழங்கப்படும் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…