மாணவர்களுக்கான கட்டணத்தை பீகார் அரசு கொடுக்கும்.! நிதிஷ்குமார் அதிரடி.!

Default Image

பீகாருக்கு திரும்பி வரும் மாணவர்களுக்கான கட்டணத்தை ரெயில்வேக்கு பீகார் அரசு கொடுத்துவிடும் என முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறினார்.

இந்தியாவில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கடந்த 40 நாள்களுக்கு மேலாக உள்ளது. இதனால், பிழைப்புக்காகவும், படிக்கவும் தங்கள் மாநிலங்களில் இருந்து வெளிமாநிலங்களில் சென்று பலர் படித்தும், வேலை செய்து  வருகிறார்கள். தற்போது ஊரடங்கு காரணமாக அவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த சூழலில் வெளிமாநிலங்களிலிருந்து மாணவர்கள், தொழிலாளர்கள் பலர் நடந்தும், சைக்கிள் மூலமாகவும்  தங்கள் சொந்த ஊர் செல்கின்றனர்.

இதனால், பிற மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக, மத்திய அரசு சிறப்பு ரயில் ஏற்பாடு  செய்துள்ளது. இந்நிலையில்,  செய்தியாளர்களிடம்  பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்,  வெளிமாநிலங்களில் இருந்து பீகாருக்கு திரும்பி வரும் மாணவர்களுக்கான கட்டணத்தை ரெயில்வேக்கு பீகார் அரசு நேரடியாக கொடுத்துவிடும் என கூறினார்.

இதற்கு முன் சிறப்பு ரெயிலில் வரும் தொழிலாளர்கள்  தங்களை 21 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டால் ரூ.1000 வழங்கப்படும் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்