Biharelections: தொடங்கவுள்ளது வாக்கு எண்ணிக்கை.. அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவு அமல்!

Published by
Surya

பீகாரில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களிழும், அதன் சுற்று வட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தல், மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும், செவ்வாயன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 55.70% வாக்குகளும், நேற்று நடந்த இறுதிக்கட்ட வாக்குபதிவில் 57.91% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

இந்த தேர்தலில் முக்கியமாக 2 கூட்டணிகள் கருதப்படுகிறது. அது, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மெகா கூட்டணி. ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மெகா கூட்டணி என்றும், பாஜக மற்றும் ஜே.டி.யு. கட்சி கூட்டணியின் பெயர், தேசிய ஜனநாயக கூட்டணி.

பீகார் தேர்தலின்போது தேர்தலுக்கு பின் டைம்ஸ் நவ், ரிபப்ளிக், சி வோட்டர், என்.டி.டி.வி. ஆகிய ஊடங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 116 இடங்களை கைப்பற்றும் எனவும், மெகா கூட்டணி 120 இடங்களையும், லோக் ஜனசக்தி தலா 1 இடத்தையும், அதனைதொடர்ந்து மற்ற கட்சிகள் 6 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பீகாரில் இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கவுள்ளதாகவும், பிற்பகலில் முடிவுகள் தெரியவரும் என கூறப்படுகிறது. இதற்காக பொதுமக்கள் முதல் அரசியல் தலைவர்கள் என அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, வாக்கு எண்ணும் மையங்களிழும், அதன் சுற்று வட்டார பகுதிகளில் அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவும், 3 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்படவுள்ளது. இந்த பணிக்காக சுமார் 8,000 துணை ராணுவ படையினர் ஈடுபடவுள்ளதாகவவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

16 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

40 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

1 hour ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

1 hour ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

2 hours ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

2 hours ago