பீகாரில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களிழும், அதன் சுற்று வட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தல், மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும், செவ்வாயன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 55.70% வாக்குகளும், நேற்று நடந்த இறுதிக்கட்ட வாக்குபதிவில் 57.91% வாக்குகளும் பதிவாகியுள்ளது.
இந்த தேர்தலில் முக்கியமாக 2 கூட்டணிகள் கருதப்படுகிறது. அது, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மெகா கூட்டணி. ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மெகா கூட்டணி என்றும், பாஜக மற்றும் ஜே.டி.யு. கட்சி கூட்டணியின் பெயர், தேசிய ஜனநாயக கூட்டணி.
பீகார் தேர்தலின்போது தேர்தலுக்கு பின் டைம்ஸ் நவ், ரிபப்ளிக், சி வோட்டர், என்.டி.டி.வி. ஆகிய ஊடங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 116 இடங்களை கைப்பற்றும் எனவும், மெகா கூட்டணி 120 இடங்களையும், லோக் ஜனசக்தி தலா 1 இடத்தையும், அதனைதொடர்ந்து மற்ற கட்சிகள் 6 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பீகாரில் இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கவுள்ளதாகவும், பிற்பகலில் முடிவுகள் தெரியவரும் என கூறப்படுகிறது. இதற்காக பொதுமக்கள் முதல் அரசியல் தலைவர்கள் என அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, வாக்கு எண்ணும் மையங்களிழும், அதன் சுற்று வட்டார பகுதிகளில் அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவும், 3 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்படவுள்ளது. இந்த பணிக்காக சுமார் 8,000 துணை ராணுவ படையினர் ஈடுபடவுள்ளதாகவவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…