Bihar Elections: அடுத்த முதல்வர் யார்?? நாளை நடைபெறவுள்ளது “வாக்கு எண்ணிக்கை!”

Published by
Surya

பீகார் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில், நாளை வாக்குகள் அனைத்தும் எண்ணும் பணிகள் தொடங்கவுள்ளது.

பீகாரில் தற்பொழுது நடைபெற்று வரும் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி முடிவடையவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும், செவ்வாயன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 55.70% வாக்குகளும், நேற்று நடந்த இறுதிக்கட்ட வாக்குபதிவில் 57.91% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

இந்த தேர்தலில் முக்கியமாக 2 கூட்டணிகள் கருதப்படுகிறது. அது, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மெகா கூட்டணி. இதில் ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மெகா கூட்டணி என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் பாஜக மற்றும் ஜே.டி.யு. கட்சிகள் கூட்டணி வைத்துக்கொண்டது.

இதன்படி, மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 180 இடங்களை ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது. ஆனால், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 55 இடங்களே கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், மற்ற கட்சிகளுக்கு 8 இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்கு பின் டைம்ஸ் நவ், ரிபப்ளிக், சி வோட்டர், என்.டி.டி.வி. ஆகிய ஊடங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி தேசிய ஜனநாயக கூட்டணி 116 இடங்களை கைப்பற்றும் எனவும், மெகா கூட்டணி 120 இடங்களையும், லோக் ஜனசக்தி தலா 1 இடத்தையும், அதனைதொடர்ந்து மற்ற கட்சிகள் 6 இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஆம்மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று 63 சதவீதம் தெரிவித்துள்ளதாகவும், நிதிஷ் குமாரின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக 21 சதவீதம் பேர் தெரிவித்தனர். மேலும், நிதிஷ் குமாரின் ஆட்சி சராசரியாக இருப்பதாக 29 சதவீதம் பேரும், மோசமாக இருப்பதாக 37 சதவீத பெரும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நாளை பீகாரில் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கவுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் அடுத்த முதல்வர் யார் என நாளை மாலைக்குள் தெரிந்துவிடும். இதற்காக பொதுமக்கள் முதல் அரசியல் தலைவர்கள் என அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

30 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

34 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

1 hour ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

2 hours ago