Bihar CM Nitish Kumar - Saurabh Kumar [File image]
Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இளம் பிரமுகர் சவுரப் குமார் என்பவர் நேற்று இரவு பாட்னா பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று பர்சா பஜார் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் சவுரப் கலந்துகொண்டுள்ளார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் சவுரபை சரமாரியாக சுட்டனர். இதில் சவுரபின் தலை மற்றும் கழுத்து பகுதியில் துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளது. உடன் இருந்த முன்முன் குமார் எனும் நண்பரும் இந்த துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்தார்.
துப்பாக்கியால் சுட்ட கும்பல் தப்பியோடிய பின்னர், உடனடியாக சவுரப் குமார் மற்றும் அவரது நண்பர் முன்முன் குமாரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சவுரப் குமார் ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முன்முன் குமார் தீவிர சிகிச்சைக்கு பின்னர் தற்போது அவரது உடல்நிலை சீராகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ஆளும் கட்சி பிரமுகர் மீதான இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆதரவாளர்கள், அப்பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து பாட்னா புன்புன் காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…