பீகார் மாநிலத்தில் வரும் 15ம் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுபோன்று பீகாரில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
எனவே, பீகாரில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு, சில புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்திருந்தார். இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் மே 15 வரை முழு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது என்றும் அப்போது, மே 15 வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். அதன் விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் தொடர்பாக, இன்று நிர்வாகக் குழு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…