உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் அடிக்கல் நாட்டு விழா வருகின்ற 05-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாஜக மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ள நிலையில் எல்.கே அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு அழைப்பு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் அத்வானி, ஜோஷி மற்றும் உமா பாரதி ஆகியோர் அடங்குவார்கள். ஆனால், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உமாபாரதி விழாவில் கலந்து கொள்ள அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது
கடந்த வாரம் லக்னோவில் உள்ள சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றத்தில் காணொளி மூலம் அத்வானி மசூதி இடிப்பது தொடர்பாக வாக்குமூலம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…