இனிவரும் நாட்களில் நாடு முழுவதும் பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதே தனது எண்ணம் என்று மம்தா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதில் பவானிபூர் தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்ட மம்தா பாஜகவை விமர்சித்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், இத்தாலியில் நடைபெற்ற உலக அமைதி மாநாட்டில் தன்னை கலந்து கொள்ள விடாமல் மத்திய அரசு வஞ்சித்து விட்டதாக குற்றம்சாட்டினார். பொய்கள், வெறுப்பு மட்டுமே பாஜகவிடம் உள்ளது. அந்த கட்சிக்கு எதிராக பேசுவோர் மீது, மத்திய அரசின் நிறுவனங்களை ஏவி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இனிவரும் நாட்களில் நாடு முழுவதும் பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதே தனது எண்ணம் என்றும், பாரதிய ஜனதா ஒரு பகட்டு கட்சி என்றும் தெரிவித்துள்ளார்.
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…