பாராளுமன்றத்தில்,குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.இதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசம் மாநிலம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் கலவரமாக மாறியது. இந்நிலையில் ஆர் எஸ் எஸ்ஸின் மாணவர் அமைப்பு சார்பில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். இதுகுறித்து அவர் பேசும் போது, இந்திய விடுதலைக்காக போராடிய பகத்சிங்கும் சுபாஷ் சந்திர போஸும் இந்திய நாட்டிற்காக பெரும் தியாகம் செய்துள்ளனர். நம் நாட்டில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சாதாரணமாக வலம் வரும் வகையில் நம் நாட்டை பொது சத்திரமாக மாற்ற வேண்டுமா? என்று தெரிவித்தார். மேலும் இவர், பாரத் மாதா கீ ஜே என சொல்ல தயாராக இருப்போர் மட்டுமே இந்தியாவில் வாழலாம் என தெரிவித்துள்ளார். போராட்டத்தின் போது பாகிஸ்தான் ஜிந்தபாத் என்று கூறியவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்திய காவல்துறை அதிகாரி ஒருவர் விருப்பம் இல்லையென்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என முஸ்லீம்களை பார்த்து கூறியதை மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கண்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…
நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு…
சென்னை : 2025-26ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது,…
சென்னை: இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய, எடப்பாடி பழனிசாமி மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார வாதம்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30,…