“மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாரத ரத்னா விருது”- அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்..!

Published by
Edison

நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான பாரத ரத்னா விருதை, மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வழங்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகிறது.குறிப்பாக கடந்த மே மாதத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது உச்சத்தை எட்டியது.இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது சிறப்பாக பணியாற்றினர்.மேலும்,அரசு மேற்கொண்டு வரும் நோய்தடுப்பு  நடவடிக்கைகளால் தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளது.

இந்நிலையில்,டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான “பாரத ரத்னா” விருதை இந்த ஆண்டு தொற்றுநோய்களுக்கு மத்தியில் மக்களுக்கு சேவை செய்த அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ,இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

இந்த ஆண்டு ‘இந்திய மருத்துவர்’ பாரத ரத்னா விருதைப் பெற வேண்டும். ‘இந்திய மருத்துவர்’ என்றால் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களும் ஆவர்.எனவே,தியாகம் செய்த அனைத்து மருத்துவர்களுக்கும் இது ஒரு உண்மையான மரியாதையாகும். தங்கள் வாழ்க்கையையும் குடும்பத்தினரையும் கவனிக்காமல் சேவை செய்து வருபவர்களுக்கு விருது கொடுப்பது,ஒரு மரியாதை. இது குறித்து நாடு முழுவதும் மகிழ்ச்சி அடைவார்கள்”,என்று தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதத்தில் இந்திய மருத்துவ சங்கத்திற்கு (ஐ.எம்.ஏ) கிடைத்த தரவுகளின்படி, இரண்டாவது அலையின் போது 730 மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.பீகாரில் அதிகபட்சமாக 115 பேர் உயிரிழந்துள்ளனர், டெல்லி 109, உத்தரபிரதேசம் 79, மேற்கு வங்கம் 62, ராஜஸ்தான் 43, ஜார்க்கண்ட் 39, ஆந்திரா 38 என இறந்துள்ளனர்.
ஐ.எம்.ஏ படி,கொரோனா தொற்றுநோயின் முதல் அலையில் 748 மருத்துவர்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…

5 hours ago

“மறு ஆய்வு செய்யணும்”…இரட்டை இலை விவகாரத்தில் அ.தி.மு.க அதிரடி மனு..!

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…

6 hours ago

“மாஸ் மட்டுமில்லை…அதுவும் இருக்கு” குட் பேட் அக்லி குறித்து உண்மையை உடைத்த ஆதிக்!

சென்னை :  அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…

6 hours ago

நாங்க போலீஸ் பேசுறோம்..82 வயது மூதாட்டியிடம் ரூ.20 கோடியை சுருட்டிய கும்பல்…3 பேர் அதிரடி கைது!

மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…

8 hours ago

டி-ஷர்ட் அணிய தடையா? இதுதான் அவர்கள் கொடுக்கும் மரியாதை! கனிமொழி பேட்டி!

டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…

8 hours ago

தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…

9 hours ago