“மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாரத ரத்னா விருது”- அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்..!

Published by
Edison

நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான பாரத ரத்னா விருதை, மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வழங்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகிறது.குறிப்பாக கடந்த மே மாதத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது உச்சத்தை எட்டியது.இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது சிறப்பாக பணியாற்றினர்.மேலும்,அரசு மேற்கொண்டு வரும் நோய்தடுப்பு  நடவடிக்கைகளால் தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளது.

இந்நிலையில்,டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான “பாரத ரத்னா” விருதை இந்த ஆண்டு தொற்றுநோய்களுக்கு மத்தியில் மக்களுக்கு சேவை செய்த அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ,இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

இந்த ஆண்டு ‘இந்திய மருத்துவர்’ பாரத ரத்னா விருதைப் பெற வேண்டும். ‘இந்திய மருத்துவர்’ என்றால் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களும் ஆவர்.எனவே,தியாகம் செய்த அனைத்து மருத்துவர்களுக்கும் இது ஒரு உண்மையான மரியாதையாகும். தங்கள் வாழ்க்கையையும் குடும்பத்தினரையும் கவனிக்காமல் சேவை செய்து வருபவர்களுக்கு விருது கொடுப்பது,ஒரு மரியாதை. இது குறித்து நாடு முழுவதும் மகிழ்ச்சி அடைவார்கள்”,என்று தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதத்தில் இந்திய மருத்துவ சங்கத்திற்கு (ஐ.எம்.ஏ) கிடைத்த தரவுகளின்படி, இரண்டாவது அலையின் போது 730 மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.பீகாரில் அதிகபட்சமாக 115 பேர் உயிரிழந்துள்ளனர், டெல்லி 109, உத்தரபிரதேசம் 79, மேற்கு வங்கம் 62, ராஜஸ்தான் 43, ஜார்க்கண்ட் 39, ஆந்திரா 38 என இறந்துள்ளனர்.
ஐ.எம்.ஏ படி,கொரோனா தொற்றுநோயின் முதல் அலையில் 748 மருத்துவர்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

36 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

45 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

54 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

1 hour ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

1 hour ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago