#BREAKING: பாரத் நெட் திட்ட டெண்டர் ரத்து.! மத்திய அரசு .!

Default Image

மத்திய அரசின் “பாரத் நெட்” திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் “இன்டர்நெட்” இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 கிராமங்களுக்கு பாதாள வழித்தடம் வழிகளில் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டது.

திட்டத்தின் மதிப்பீடு ரூ.1,950 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க டெண்டர் வழங்கியதில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் மற்றும் திமுக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

இந்நிலையில், டெண்டர் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை  என கூறி மத்திய வர்த்தக அமைச்சகம் டெண்டரை  ரத்து செய்துள்ளது. கருவிகள் கொள்முதலுக்கான டெண்டரில் குறைகளைக் களைந்து மீண்டும் டெண்டர்  விட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்