கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனைக்காக தன்னார்வலர்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இந்தியாவில், உள்நாட்டு தடுப்பூசியான கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனைக்கு ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் 13,000 தன்னார்வலர்களை சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
கூடுதலாக, பயோடெக் கோவாக்சின் 3 ஆம் கட்ட சோதனைகளுக்கு 26,000 தன்னார்வலர்களை நியமிக்க பரிசீலித்து வருகிறது. தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனித சோதனைகள் நவம்பர் நடுப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளன. பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுசித்ரா எலா கூறுகையில், நாடு முழுவதும் உள்ள 13,000 தன்னார்வலர்களின் ஆதரவுக்கு நான் நன்றி கூறுகிறேன்.
பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு முடிவுகளுடன் 1-2 கட்ட சோதனைகளில் 1,000 தன்னார்வலர்கள் மீது நடத்தப்பட்ட சோதனைகள் மிகவும் சாதகமான முடிவுகளை அளித்துள்ளது என்று கூறினார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் இணைந்து கோவாக்சின் உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…