இன்று ஆளுநரை சந்திக்கும் பகவந்த் மான்!

Default Image

உபி,பஞ்சாப்,கோவா,மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு அண்மையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில்,நேற்று முன்தினம் ஆக்கு எண்ணிக்கை நடைபெற்றது.இதில்,பஞ்சாப் தவிர நான்கு இடங்களில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதே சமயம்,பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் புதிய அரசின் பதவியேற்பு விழா மார்ச்  16-ஆம் தேதி நடைபெறுகிறது.ஆளுநா் மாளிகைக்குப் பதிலாக சுதந்திரப் போராட்டத் தியாகி பகத் சிங் பிறந்த ஊரான கத்கா் கலன் கிராமத்தில் நடைபெறும் என பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவரும்,முதல்வா் வேட்பாளருமான பகவந்த் மான் கூறியிருந்தார்.

இந்நிலையில்,பஞ்சாபில் ஆட்சியமைக்க இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை  சந்தித்து ஆட்சி அமைப்பது குறித்து ஆம் ஆத்மி பகவந்த் மான் உரிமை கோருகிறார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் 92 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.டெல்லியை தாண்டி முதல் முறையாக ஆம் ஆத்மி பஞ்சாப்பில் ஆட்சி அமைக்க உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்