பீட்சா ஆர்டர் செய்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.44 ஆயிரம் அபேஸ்.
பால்கர் மாவட்டம் வசாயை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் ஆன்லைனில் பீட்சா ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இவர் இதற்காக தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.359-ஐ பரிமாற்றம் செய்துள்ளார். வெகுநேரமாகியும் பீட்சா வராததால் ஆன்லைனில் இருந்த எண்ணை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார்.
அப்போது, மறுமுனையில் பேசிய நபர் தன்னை தீபக் சர்மா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அந்த பெண்ணிடம் தொழிற்நுட்ப கோளாறு காரணமாக உங்களது ஆர்டர் எங்களுக்கு வந்து சேரவில்லை என்றும், நீங்கள் செலுத்திய பணம் உங்களுக்கு சில தினங்களில் வந்துவிடும் என கூறி, அந்த பெண்ணின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டுவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
அதன்பின் சில மணி நேரங்களில், அந்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.43 ஆயிரத்து 900 மற்றொரு வங்கிக்கணக்கிற்கு தொடர்ச்சியாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், மாணிக்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, அப்பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நூதன முறையில் பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்த மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி அவரை தேடிவருகின்றனர்.
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…