ஜாக்கிரதை!ஆதார் விவரங்களை பகிரக்கூடாது – சுற்றறிக்கையை திரும்ப பெற்ற மத்திய அரசு!

Published by
Edison

ஆதார் அட்டை நகலை எங்கும் கொடுக்க வேண்டாம் என்ற அறிவிப்பை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.முன்னதாக, ஹோட்டல்கள்,திரையரங்குகள் உள்ளிட்ட எந்தவொரு உரிமம் பெறாத தனியார் நிறுவனத்துடனும் ஆதார் அட்டை நகலைப் பகிரக்கூடாது என்றும்,அவை தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது எனவும் மத்திய அரசு எச்சரித்திருந்தது.இது தொடர்பாக,மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“பயனர் உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே ஒரு நபரின் அடையாளத்தை நிறுவ ஆதாரை பயன்படுத்த முடியும்.மாறாக, ஹோட்டல்கள் அல்லது திரையரங்குகள் போன்ற உரிமம் பெறாத தனியார் நிறுவனங்கள் ஆதார் அட்டையின் நகல்களை சேகரிக்கவோ வைத்திருக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.,இது ஆதார் சட்டம் 2016 இன் கீழ் குற்றமாகும்.UIDAI இலிருந்து சரியான பயனர் உரிமம் உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

மேலும்,அடையாள சரிபார்ப்பு நோக்கத்திற்காக,தனித்துவமான 12 இலக்க எண்ணின் கடைசி 4 இலக்க எண்களை மட்டுமே காட்டும் வகையிலான ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”,என்று தெரிவித்திருந்தது.அதன்படி,UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://myaadhaar.uidai.gov.in/ இலிருந்து ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை மட்டும் காட்டும் ஆதாரைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்” என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையான நிலையில், தற்போது இந்த அறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. குறிப்பாக,ஆதார் அட்டையை எப்போதும் போல பயன்படுத்தலாம் எனவும்,ஆனால்,ஆதார் விவரங்களை பகிரும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இருப்பினும்,பத்திரிகை செய்தியினை மக்கள் தவறாக புரிந்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதைக் கருத்தில் கொண்டு, முன்னர் வெளியிட்ட சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.மேலும்,தனிப்பட்ட ஆதார் அட்டையில் விவரங்கள் பாதுகாக்கப்படுவதாகவும்,தனிப்பட்ட விவரங்கள் கசிவுக்கு எந்த வாய்ப்பும் இல்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

aadhar

Recent Posts

நவராத்திரி நான்காம் நாள்.! வீட்டில் செல்வம் பெருக மகாலட்சுமி தேவியை வழிபடும் முறை..!

சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…

15 mins ago

விறுவிறுப்பாக நடைபெறும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் … தற்போதய நிலவரம் என்ன?

ஹரியானா : இன்று காலை 7 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி…

27 mins ago

“பிக் பாஸ் போறேன் ஆதரவு கொடுங்க”..கெஞ்சும் குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருத்திகா!!

சென்னை : சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னதிரைக்கு வந்து கலக்கிக் கொண்டு இருப்பார்கள்.…

35 mins ago

குடை எடுத்துக்கோங்க.. அடுத்த 2 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களில் மழை பெய்யும்.!

சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

38 mins ago

தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் மறைவு.. நானி, ஜூனியர் என்டிஆர் அஞ்சலி.!

ஹைதராபாத் : பழம்பெரும் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரி(38) இன்று அதிகாலை காலமானார். காயத்ரிக்கு கணவர் மற்றும்…

52 mins ago

“மதமும், சாதியும் ஒரு மனிதனை வெறுக்கவைக்கும்”.. அஜித் பேசிய வைரல் வீடியோ.!

சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், "வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை…

1 hour ago