ஜாக்கிரதையா இருங்க.! சீட்டு, தாயம் விளையாடிய 39 பேருக்கு கொரோனா.!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆந்திராவில் வீட்டில் முடங்கியுள்ள மக்கள் பொழுதுபோக்கிற்காக சீட்டு, தாயம் விளையாடிய 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கியுள்ள மக்களில் சிலர் பயனுள்ள வகையில் ஏதேனும் செய்து வருகின்றன. சிலர் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றன. அதில் சிலர் சமூக விலகலை பின்பற்றாமல் நண்பர்களுடன் பல்வேறு விளையாட்டு விளையாடி வருகின்றன. அந்த வகையில் ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் பொழுதுப்போக்கிற்காக நண்பர்களுடன் சீட்டு மற்றும் தாயம் விளையாடிய சுமார் 39 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் இம்தியாஸ் கூறுகையில், கிருஷ்ணா மாவட்டம் லங்காவில் டிரக் டிரைவர் ஒருவர் நண்பர்களுடன் சீட்டு விளையாடியுள்ளார். அதன் அருகே பெண்களும் குழுவாக தாயம் விளையாடிக்கொண்டிருந்தன. அந்த டிரைவர் மூலமாக அங்கிருந்த 24 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. அதேபோல், கர்மிகா நகரிலும் சீட்டு விளையாடிய டிரக் டிரைவர் மூலமாக 15 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களில் சுமார் 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த டிரைவர் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவர் எங்கெல்லாம் சென்று வந்தாரோ அங்கெல்லாம் சோதனை நடத்தப்பட்டு வவருகின்றன. இதற்கு காரணம் சமூக இடைவெளியை பின்பற்ற தவறியதே என்று தெரிவித்துள்ளார். இதனிடையே ஆந்திராவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 1061 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago