ஜாக்கிரதையா இருங்க.! சீட்டு, தாயம் விளையாடிய 39 பேருக்கு கொரோனா.!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆந்திராவில் வீட்டில் முடங்கியுள்ள மக்கள் பொழுதுபோக்கிற்காக சீட்டு, தாயம் விளையாடிய 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கியுள்ள மக்களில் சிலர் பயனுள்ள வகையில் ஏதேனும் செய்து வருகின்றன. சிலர் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றன. அதில் சிலர் சமூக விலகலை பின்பற்றாமல் நண்பர்களுடன் பல்வேறு விளையாட்டு விளையாடி வருகின்றன. அந்த வகையில் ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் பொழுதுப்போக்கிற்காக நண்பர்களுடன் சீட்டு மற்றும் தாயம் விளையாடிய சுமார் 39 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் இம்தியாஸ் கூறுகையில், கிருஷ்ணா மாவட்டம் லங்காவில் டிரக் டிரைவர் ஒருவர் நண்பர்களுடன் சீட்டு விளையாடியுள்ளார். அதன் அருகே பெண்களும் குழுவாக தாயம் விளையாடிக்கொண்டிருந்தன. அந்த டிரைவர் மூலமாக அங்கிருந்த 24 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. அதேபோல், கர்மிகா நகரிலும் சீட்டு விளையாடிய டிரக் டிரைவர் மூலமாக 15 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களில் சுமார் 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த டிரைவர் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவர் எங்கெல்லாம் சென்று வந்தாரோ அங்கெல்லாம் சோதனை நடத்தப்பட்டு வவருகின்றன. இதற்கு காரணம் சமூக இடைவெளியை பின்பற்ற தவறியதே என்று தெரிவித்துள்ளார். இதனிடையே ஆந்திராவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 1061 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மிரட்டலான ஆட்டம்., ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!

மிரட்டலான ஆட்டம்., ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ன் இரண்டாவது ஆட்டத்தில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் டாஸ்…

4 hours ago

ஜஸ்ட் மிஸ்.., IPL சம்பவத்தை தவறவிட்ட ஹைதிராபாத் அணி! இனி என்ன நடக்க போகுதோ?

ஹைதிராபாத் : இன்று ஐபிஎல் 2025 தொடரின் 2வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹைதராபாத்தில்…

4 hours ago

அதே மிரட்டல் அடி சம்பவம்., ராஜஸ்தானை துவம்சம் செய்த ஹைதிராபாத்!

ஹைதிராபாத் : இன்று, (மார்ச் 23) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரின்…

5 hours ago

கடலோர மக்கள் இதனை செய்யுங்கள்! ரஜினிகாந்த் வெளியிட்ட புதிய விழிப்புணர்வு வீடியோ!

சென்னை : கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலும், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த…

6 hours ago

கொம்பன் இறங்கிட்டான்.., ராஜஸ்தானுக்கு வானவேடிக்கை காட்ட தொடங்கிய ஹைதிராபாத்!

ஹைதிராபாத் : கடந்த 2024 சீசனில், சன்ரைசர்ஸ் ஹைதிராபாத் அணி தனது அதிரடியான பேட்டிங்கால் எதிரணி பவுலர்களை கதிகலங்க செய்தது.…

8 hours ago

நான் வீல்சேரில் இருந்தால் கூட CSK-வுக்காக விளையாடுவேன்! M.S.தோனி நெகிழ்ச்சி!

சென்னை : கிரிக்கெட் உலகில் சில வீரர்களுக்கு அணி என்பது வெறும் விளையாட்டுகானது மட்டுமல்ல. சிலருக்கு அது ஒரு குடும்பம்…

9 hours ago