Categories: இந்தியா

பெங்களூரு: தாயை கொன்றுவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த மகன்!

Published by
பாலா கலியமூர்த்தி

பெங்களூரு: கேஆர் புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீமியா லேஅவுட்டில் நேற்று காலை 40 வயது (தாய்) பெண் தனது இளம் (வயது 17) மகனால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண் கோலார் மாவட்டம் முல்பாகல் பகுதியைச் சேர்ந்த நேத்ரா என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டது.

தகராறு காரணமாக டிப்ளமோ படித்துவரும் இளைஞன், அவரது தாய் நேத்ராவை இரும்பு கம்பி கொண்டு தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதன்பின், காவல் நிலையத்திற்கு சென்று அந்த இளைஞன், தனது தாயைக் கொன்றுவிட்டேன் என கூறி சரணடைந்தார். இதுதொடர்பாக காவல்துறை கூறியதாவது, குற்றம் சாட்டப்பட்டவர் முல்பாகலில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்துள்ளார்.

காவல் நிலையத்தில் துப்பாக்கிசூடு.. பாஜக எம்எல்ஏ உட்பட 3 பேர் கைது – உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு!

நேற்று (வெள்ளிக்கிழமை) காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்ல இருந்த அந்த இளைஞனை அவரது தாய் திட்டியுள்ளார். சம்பவம் நடந்த போது வீட்டில் நேத்ரா மற்றும் அவரது மகன் மட்டுமே இருந்துள்ளனர். இந்த சம்பவ நடந்த இடத்திற்கு ஒயிட்பீல்ட் துணை போலீஸ் கமிஷனர் சிவக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த சம்பவம் குறித்து கே.ஆர்.புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

இதனால், தாயை கொன்ற மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த விசாரணையின்போது, தாயார் தன்னை முறையாக பார்த்து கொள்ளவில்லை என்றும் சரியான உணவு தருவதில்லை எனவும் இளைஞர் தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரிக்கு புறப்படும்போது தாய் திட்டியதாகவும், இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார் எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

33 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

37 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

2 hours ago