பெங்களூரு சேர்ந்த பரத் என்பவர் பிரபல ரவுடி இவரது சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். இவரது மீது கொலை, கொள்ளை என 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் உள்ளன.இதனால் பரத் போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தார்.கடந்த 22-ம் தேதி உத்தரபிரதேச பதுங்கி இருந்த பரத்தை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
அவரை நேற்று முன்தினம் நள்ளிரவு காரில் பெங்களூரு அழைத்து வந்தனர்.அப்போது பீனியா அருகே வந்தபோது , போலீசார் வந்த கார் மீது மற்றொரு கார் மோதியது. இந்த காரில் இருந்த மர்மநபர்கள் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனை பயன்படுத்தி பரத் தனது கூட்டாளிகளின் காரில் தப்பிச்சென்று விட்டார்.
தப்பி சென்ற பரத்தை யசருகட்டா மெயின் ரோட்டில் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது பரத் வைத்திருந்த துப்பாக்கியால் இன்ஸ்பெக்டர் தினேஷ் பட்டீலை சுட்டார். இதனால் அவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதையெடுத்து மற்ற போலீசாரை பரத்தும் , அவரது கூட்டாளிகளும் துப்பாக்கியாலும் சுட முயற்சி செய்து ஓட முயன்றனர்.
இதனால் இன்ஸ்பெக்டர் லோகித் என்பவர் பரத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டார். பின்னர் பரத்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…