#BarathBandh: விவசாயிகள் ரயில் மற்றும் சாலைகளை மறித்து போராட்டம்.!

Default Image

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ரயில் மறைந்து இடதுசாரி கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 13வது நாட்களாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பல துறைகளை சார்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தும், போராட்டத்தில் கலந்துகொண்டும் வருகின்றனர்.

நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். இதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

இந்நிலையில், நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள ஜாதப்பூர் ரயில் நிலையத்தில், இடதுசாரி கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ரயில் தண்டவாளங்களில் அமர்ந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், போன்ற மாநிலங்களில் விவசாய அமைப்பினர் கோஷங்ககளை எழுப்பி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஒடிசா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் மறியல் செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்