ரூ.1.61 லட்சம் கோடி கடன்களுக்கு வங்கிகள் அனுமதி- மத்திய நிதியமைச்சகம்.!

Published by
murugan

அவசர உத்தரவாத கடன் திட்டத்தின்  கீழ், சிறு, குறு, மத்திய ரக தொழில்களுக்கு இதுவரை ரூ.1.61 லட்சம் கோடி கடன்களுக்கு வங்கிகள் அனுமதி வழங்கியுள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட  பொதுமுடக்கத்தால் பல்வேறு துறைகள் பெரும் சரிவைச் கண்டது. அவற்றை மீட்டெடுக்க கடந்த மே மாதம் ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் நிதித் தொகுப்பை “சுயச்சார்பு இந்தியா திட்டம்” என்ற பெயரில் மத்திய அரசு அறிவித்தது.

அதில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு ஊக்கமளிக்க ரூ.3 லட்சம் கோடி கடனுதவி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்தக் கடன்களை வழங்கி வருவது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் நேற்று முன்தினம் புள்ளிவிவரத்தை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, செப்டம்பர் 03, 2020 நிலவரப்படி, பொதுத்துறை வங்கி மற்றும் தனியார் வங்கிகளால் அவசர உத்தரவாத கடன் திட்டத்தின்  கீழ் அனுமதிக்கப்பட்ட மொத்த தொகை ரூ .1,61,017.68 கோடியாக உள்ளது. இதில் ரூ .1,13,713.15 கோடி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை வங்கிகளால் அனுமதிக்கப்பட்ட கடன் தொகை ரூ .78,067.21 கோடியாக அனுமதித்துள்ளன. இதில், செப்டம்பர் 03 ஆம் தேதி வரை 62,025.79 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 24 ஆகஸ்ட் 2020 உடன் ஒப்பிடும்போது, அனுமதிக்கப்பட்ட கடன்களின் மொத்த தொகையில் 5,022.06 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

செப்டம்பர் 03, 2020 வரை பொதுத்துறை வங்கி மற்றும் தனியார் துறை வங்கிகள் இணைந்து வழங்கிய கடன்களின் மொத்த தொகையில் 7,786.16 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Published by
murugan

Recent Posts

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

26 minutes ago

தவெக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் சஜி காலமானார் – விஜய் இரங்கல்.!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…

1 hour ago

எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…

2 hours ago

செங்கோட்டையன் விவகாரம் : “யாரும் எங்கும் போகலாம்..,” கடுப்பான இபிஎஸ்!

சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…

2 hours ago

தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026 : வெளியான முக்கிய அறிவிப்புகள் இதோ….

சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…

4 hours ago

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக வல்லவர்கள்…பட்ஜெட்டில் ஒன்னு இல்லை..இபிஎஸ் காட்டம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…

4 hours ago