விமான போக்குவரத்து சேவை செப்டம்பர் 30- ஆம் தேதி வரை ரத்து – விமான போக்குவரத்துறை

Default Image

இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து சேவை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  தற்பொழுது 3 -ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இது இன்றுடன்  நிறைவுபெறுகிறது. இதனிடையே  மத்திய அரசு, தளர்வுகளுடனான ஊரடங்கை செப்டம்பர் 31- ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.மேலும், பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில் விமான போக்குவரத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,  இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து சேவை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது . சர்வதேச சரக்கு போக்குவரத்து விமானங்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்