கிருமி நாசினி ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு உத்தரவு

Default Image

ஆல்கஹாலை அடிப்படையாக கொண்ட சானிடைசர் ஏற்றுமதிக்கு தடை வித்தித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சானிடைசர் எனப்படும் கிருமி நாசினி ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, ஆல்கஹாலை அடிப்படையாக கொண்ட சானிடைசர் ஏற்றுமதிக்கு தடை வித்தித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கைகளை சுத்தப்படுத்தும்போது கொரோனா வைரஸை அழிப்பதில் சானிடைசர் முக்கிய பங்கு வகித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தங்கள் கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வந்தன. 

அதன்படி, மக்களும் கைகளை சானிடைசரை கொண்டு சுத்தம் செய்து வருகின்றனர். இதனால் சானிடைசர் மக்களிடையே அத்தியாவசிய பொருளாக மாறியது. அதில், ஆல்கஹால் கலந்த சானிடைசரை பலரும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதன் விளைவை அறிந்து அதனை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்து ஆல்கஹாலை அடிப்படையாக கொண்ட சானிடைசர் ஏற்றுமதிக்கு தடை வித்தித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்