தனது அரசியல் வரிசை அறிவித்தார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி!

Published by
பாலா கலியமூர்த்தி

பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி, தனது அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்த் என்பவரை அறிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்த மாயாவதி (வயது 67) திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும், வாரிசு அரசியலுக்கு பெயர் போனவர் மாயாவதி.

அதன்படி, தனது சகோதரர் ஆனந்த் கடந்த 2019ம் ஆண்டு கட்சியின் துணைத் தலைவராகவும், ஆகாஷ் ஆனந்தை தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்து இருந்தார். பகுஜன் சமாஜ் கட்சிக்கு உ.பி தவிர ராஜஸ்தான் உட்பட பிற மாநிலங்களிலும் எம்எல்ஏக்கள் உள்ளனர். மயவாதிக்கு பிறகு யார் தலைவரை என கேள்வி எழுந்தது.

இந்த சூழலில், அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தனது அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்த் இருப்பார் என்றும் தனக்கு பிறகு அவர் தான் பகுஜன் சமாஜ் கட்சியை வழிநடத்துவார் எனவும் மாயாவதி அறிவித்துள்ளார்.

சிறப்பு அந்தஸ்து ரத்து… 4 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..!

அதாவது, மாயாவதியின் அரசியல் வாரிசாக சகோதரர் அவரது ஆனந்த் குமாரின் மகன் 28 வயதான ஆகாஷ் ஆனந்த் இருப்பார் என அறிவித்தார். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற உத்தரபிரதேச சட்டப்பேரவைதேர்தலில் ஆகாஷ் ஆனந்த் மாயாவதியுடன் இணைந்து செயல்பட்டார். இதன்பின் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய நபராக இருந்த ஆகாஷ் ஆனந்த், தேசிய ஒருங்கிணைப்பாளாராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது அவரை தனது அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்துள்ளார். மாயாவதி அறிமுகத்தால் 22 வயதிலேயே அரசியலில் நுழைந்தவர் ஆகாஷ் ஆனந்த். 2019-ம் ஆண்டு கட்சியின் துணை தலைவராக ஆகாஷ் ஆனந்த் நியமிக்கப்பட்டபோதும் அந்த பதவியை ஏற்க மறுத்திருந்தார்.

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையில் மயவாதிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தபோதும் கட்சியின் முகமாக இருந்தவர் ஆகாஷ் ஆனந்த். கடந்த ஆண்டு முதலே ஆகாஷ் ஆனந்த் தான் பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த தலைவர் என்ற பேச்சு அடிப்பட்டு வந்த நிலையில், தற்போது உறுதியாகி உள்ளது.

குடும்ப அரசியலை விமர்சித்து வந்த மாயாவதி, அவரது கட்சியிலும் குடும்ப அரசியல் தலைதூக்கியுள்ளது என்று எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த உதய்வீர் சிங் கூறுகையில், மாயாவதி தனது அரசியல்வாரிசாக ஆகாஷ் ஆனந்தை அறிவித்துள்ளார். எங்கள் கட்சிக்கு இளம் தலைவர் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

Recent Posts

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

3 hours ago

தோனி அவுட்டா இல்லையா? அம்பயர் முடிவால் அப்செட்டான சென்னை ரசிகர்கள்!

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…

3 hours ago

முதல் பேட்டிங்கிலும் சொதப்பிய சென்னை…கொல்கத்தாவுக்கு வைத்த சின்ன இலக்கு!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…

4 hours ago

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்…எம்பி கனிமொழி காட்டம்!

சென்னை :  2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…

5 hours ago

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு! சென்னையில் ருதுராஜ் பதில் யார்?

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…

6 hours ago

பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் : நயினார் நாகேந்திரனுக்கு போட்டியாக ஒருவர் வேட்புமனு?

சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…

7 hours ago