Kerala Elephant Incident [file image]
கேரளா : கேரளாவில் ஒரு சோகமான சம்பவத்தில், ஜூன் 20, வியாழன் அன்று ஒரு யானை மிதித்து பாகன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக யானை சவாரி நடத்தப்படுவது என்பது வழக்கம். எனவே, யானை சவாரிக்காக பாலகிருஷ்ணன் என்பவர் யானையை பராமரித்து கொண்டிருந்தார். அப்போது யானையை பாகன் கட்டளையிட்டு கொண்டு பிரம்பால் தாக்கினார்.
இதனால் ஆக்ரோஷம் கொண்ட அந்த யானை பாகனின் மீது ஏறி அவரை கொன்றது. இதனை கண்டு அதிர்ச்சியான, மற்றோருவர் பாகன் வேகமாக வந்து யானையை குச்சியை வைத்து தாக்கினார். இருப்பினும், பாகன் பாலகிருஷ்ணன் பரிதமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
குறிப்பு : இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், ஒரு சிலருக்கு வீடியோ பார்ப்பது சற்று சோகத்தை உண்டு செய்யலாம். எனவே, மனநிலைக்கு ஏற்றவாறு முடிவு செய்து கொள்ளுங்கள்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சட்டவிரோத யானை சவாரி மையத்திற்கு எதிராக வனத்துறை வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும், இடுக்கி கலெக்டர் ஷீபா ஜார்ஜ், சட்டவிரோத சவாரி மையங்கள் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதிக்காது என்றும், வனத்துறையினர் தொடர்ந்து ஆய்வு நடத்தி, இதுபோன்ற நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பெரிய இயக்குனருக்கு மகனாக பிறந்தாலும் மனோஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள…
சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மார்ச் மாத ஊதியம்ஏப்ரல் 2 ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு…
சென்னை : டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேரில் சந்தித்தார். கூட்டணியில் இருந்து…
கொல்கத்தா : நைட் ரைடர்ஸ் (KKR) அணியைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் ரமன்தீப் சிங். இவரை இந்த ஆண்டு கொல்கத்தா அணி…
சென்னை : மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தை அண்மையில் அறிவித்துள்ளன. அதன்படி, டேங்கர்…