சர்வதேச பயணிகளுக்கு இந்திய விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை எடுக்கும் முறை மீண்டும் தொடக்கம்.
சீனா, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவல் உருவெடுக்க தொடங்கி உள்ளன. இதில் நாட்டில் கணிக்கப்பட்ட மூன்றாவது அலைகளில் சீனா தற்போது முதல் இடத்தில் உள்ளது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் தெரிவித்திருந்தார்.
தற்போதைய மூன்றாவது அலை இந்த குளிர்காலத்தில் உச்சத்தை எட்டும் என்றும் எச்சரித்து உள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு, சீனாவின் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என ஆலோசித்து வருகிறது.
அந்த வகையில், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், கொரோனா பரவல் மீண்டும் தொடங்க ஆரம்பித்த காரணத்தால் பொதுமக்கள் அனைவரும் மீண்டும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், சர்வதேச பயணிகளுக்கு இந்திய விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை எடுக்கும் முறை மீண்டும் இன்று முதல் அமலுக்கு வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய பயணிகளில் உத்தேசமானவர்களிடமிருந்து கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…