மேற்கு வங்கத்தின் அசன்சோல் எம்.பி.யும், மத்திய அமைச்சருமான பாபுல் சுப்ரியோவுக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா காரணமாக நிலைமை மோசமடைந்து வருகிறது. ஒரு நாளில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், படுக்கைகள் உள்ளிட்ட பற்றாக்குறைகள் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் காரணமாக பொது மக்கள் முதல் முதல்வர், எம்.எல்.ஏமற்றும் அமைச்சர்கள் வரை அனைவரை பாதிக்கபப்ட்டுள்ளனர்.
அதிகரித்து வரும் தொற்றுநோய்களைத் தடுக்க நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் வார இறுதி ஊரடங்குகள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதி எம்.பி.யும், மத்திய அமைச்சருமான பாபுல் சுப்ரியோவுக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருடன் அவரது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பாபுல் சுப்ரியோ தனது ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட்டதால் நாளை அசன்சோலில் வாக்களிக்க முடியாது. மேற்கு வங்காளத்தில் நாளை 36 தொகுதிகளில் 7-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…