அலோபதி மருத்துவ முறை குறித்து தவறான கருத்து தெரிவித்ததால், பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனத்தின் உரிமையாளரான பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து நோயாளிகளை குணப்படுத்த ஆங்கில மருத்துவம்,சித்தா உள்ளிட்ட சிகிச்சை முறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில்,பாபா ராம்தேவ் சமீபத்தில் அலோபதி மருத்துவம் குறித்து காணொளி ஒன்றில் தவறாக பேசியுள்ளார்.
அதில்,பாபா ராம்தேவ் கூறியிருப்பதாவது,”அலோபதி மருத்துவம் ஒரு முட்டாள்தனமான அறிவியல்,அதனால்,இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையில் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர்.மேலும்,அலோபதி மருத்துவ முறை ஒரு காலாவதியானது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய மருத்துவ சங்கம்,பாபா ராம்தேவ்,தான் கூறிய கருத்தை,திரும்பப் பெற வேண்டும் என்றும் அதற்காக எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் அதில்,இந்த நோட்டீஸ் பெறப்பட்ட 14 நாட்களுக்குள் பாபா ராம்தேவ் தனது கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில், சிவில் மற்றும் குற்றவியல் ரீதியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்”,என்றும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து,மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், தனது ட்விட்டர் பக்கத்தில்,”கொரோனாவுக்கு எதிராக போராடி மக்களை காக்கும் போராளிகளை அவமதிக்கும் வகையில் பாபா ராம்தேவ் பேசியுள்ளார்.எனவே,அவர்தமது கருத்தை திரும்பப் பெற வேண்டும்”,என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில்,பாபா ராம்தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தனின் கடிதம் கிடைக்கப் பெற்றேன்.எனவே,அலோபதி மருத்துவம் தொடர்பான என்னுடைய கருத்துகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். மேலும்,அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்”,எனக் கூறியுள்ளார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…