அயோத்தியில், வருகிற 5-ந் தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடைபெறவுள்ளது. இந்த பூமி பூஜையில் பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் பல மாநில முதல்வர்கள் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில், இந்த விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது கோவிலின் தலைமை குருவின் உதவியாளரான பிரதீப் தாஸ் மற்றும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 14 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
திட்டமிட்டப்படி அயோத்தி கோவில் அடிக்கல் நாட்டு விழா நடக்கும் என கோவில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதீப் தாஸ் என்பவர் தினமும் பூஜைகள் மேற்கொள்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி வருவதை ஒட்டி 3 கிலோ மீட்டர் தொலைவில் ஹெலிகாப்டர் தரையிறங்க ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவை ஒட்டி தூய்மைப் பணியில் 300 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
அயோத்தில் இதுவரை 375 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…