அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி! உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?!

Published by
மணிகண்டன்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கினை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் பாப்டே,சந்திராசூட்,அசோக் பூஷன்,அப்துல் நாசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வாசித்தனர். அதில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் இதோ!

  • மீர்பாகி என்பவரால் பாபர் கோவில் கட்டப்பட்டது. .
  • காலியாக இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை.
  • மதங்களுக்குள் இருக்கும் நம்பிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் மதிப்பளிக்கிறது.
  • மத நம்பிக்கை அடிப்படையில் நிலத்தின் மீதான உரிமையாளர் யார் என கூறிவிட முடியாது.
  • மதங்களில் இருக்கும் இறைநம்பிக்கைகளில் உச்சநீதிமன்றம் தலையிடாது.
  • சர்ச்சைக்கு உரிய இடத்தின் மையப்பகுதியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.
  • மசூதி கட்டப்பட்ட இடத்திற்கு கீழே உள்ள கட்டிடம் முஸ்லீம் கட்டுமானம் அல்ல என தொல்லியல் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
  • கோவில் இடித்துதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என எந்தவித ஆதாரமும் தொல்லியல் துறை வசம் இல்லை.
  • தொல்லியல் துறை தரவுகளை ஒதுக்கிவிட முடியாது. – உச்சநீதிமன்றம்
  • சர்ச்சைக்குரிய இடத்தின் முற்றத்தை இந்துக்கள் தங்கள் வசம் வைத்திருந்தனர்.
  • ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னரே ராமர், சீதாவை இந்துக்கள் வணங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன.
  • சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி இஸ்லாமிய முறைப்படி கட்டப்படவில்லை என்கிற வாதம் நிராகரிக்கப்பட்டது.
  • 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது.
  • நிலத்தின் உட்பகுதியில் இஸலாமியர்கள் தொழுகை நடத்தி வந்துள்ளனர்.
  • சன்னி வக்ஃபு முஸ்லீம் அமைப்பிற்கு அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும்.

அயோத்தியில் உள்ள அந்த குறிப்பிட்ட 2.77 ஏக்கர் நிலம் ராமஜென்ம அமைப்பான இந்து அமைப்புக்கே சொந்தம் எனவும், அங்கு கோவில் கட்டுவதைக்காக 3 மாதத்திற்குள் மத்திய அரசானது அறக்கட்டளை ஒன்றை நிறுவ வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
 

Published by
மணிகண்டன்

Recent Posts

கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது மக்களிடையே எடுபடாது – மு.க.ஸ்டாலின்!

கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது மக்களிடையே எடுபடாது – மு.க.ஸ்டாலின்!

சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…

1 hour ago

INDvENG : கில்லியாக கலக்கிய கில்.. 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

2 hours ago

எல்லாத்துக்கும் காரணமே அஜித் சார் தான்! விடாமுயற்சி குறித்து உண்மைகளை உடைத்த இயக்குநர்!

சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…

3 hours ago

ஐயோ மீண்டும் மீண்டுமா! சொதப்பிய ரோஹித்…வேதனையில் ரசிகர்கள்!

மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…

3 hours ago

“இதுக்கா என் படத்தை வேணாம்னு சொன்னீங்க”…வைரலாகும் விடாமுயற்சி மீம்ஸ்கள்!

அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…

4 hours ago

படித்துவிட்டு போராட்டம் பண்ணுங்க..ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அட்வைஸ்!

டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…

5 hours ago