இந்தியன் ஆயில் நிறுவனம், விமான எரிபொருளின் விலையை 23 விழுக்காடு குறைத்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில், 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வண்ணம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவைகளும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஒன்றரை மாத காலமாக விமான எரிபொருளின் பயன்பாடும், தேவையும் 90 விழுக்காட்டுக்கும் மேல் குறைந்துள்ளது.
இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம், விமான எரிபொருளின் விலையை 23 விழுக்காடு குறைத்துள்ளது. அதாவது 1000 லிட்டர் எரிபொருள் விலையில் 6,812 ரூபாய் குறைத்துள்ளது. டெல்லியில் ஆயிரம் லிட்டர் விமான எரிபொருள் 22,544 ரூபாயாகவும், மும்பையில் 22,109 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 27,804 ரூபாயாகவும், சென்னையில் 23, 414 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடதக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…