இந்தியன் ஆயில் நிறுவனம், விமான எரிபொருளின் விலையை 23 விழுக்காடு குறைத்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில், 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வண்ணம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவைகளும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஒன்றரை மாத காலமாக விமான எரிபொருளின் பயன்பாடும், தேவையும் 90 விழுக்காட்டுக்கும் மேல் குறைந்துள்ளது.
இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம், விமான எரிபொருளின் விலையை 23 விழுக்காடு குறைத்துள்ளது. அதாவது 1000 லிட்டர் எரிபொருள் விலையில் 6,812 ரூபாய் குறைத்துள்ளது. டெல்லியில் ஆயிரம் லிட்டர் விமான எரிபொருள் 22,544 ரூபாயாகவும், மும்பையில் 22,109 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 27,804 ரூபாயாகவும், சென்னையில் 23, 414 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடதக்கது.
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…