Categories: இந்தியா

போராட்டத்தில் விவசாயி எப்படி இறந்தார்..? வெளியான அதிர்ச்சி தகவல்..!

Published by
murugan

farmers protest: கடந்த பிப்ரவரி 13-ம் தேதி முதல் அனைத்து பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் மற்றும் பிற கோரிக்கை முன்வைத்து டெல்லி நோக்கி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் 4கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்.

READ MORE- டெல்லியில் குவிந்த பாஜக தலைவர்கள்.. விரைவில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.!

கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் ஹரியானா எல்லையில் உள்ள பஞ்சாபின் கானௌரி மற்றும் ஷம்பு எல்லைகளில் விவசாயிகள் முகாமிட்டுள்ளனர். தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நேற்று பிப்ரவரி 29 ஆம் தேதி அறிவிப்பதாக விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், விவசாயிகளின் டெல்லி சலோ ஊர்வலத்தின் போது கடந்த வாரம் கானௌரி எல்லையில் ஹரியானா காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலின் போது விவசாயி சுபாகரன் சிங் இறந்தார். இந்த வழக்கில் பஞ்சாப் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். சுபாகரன் சிங்கின் பிரேதப் பரிசோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

READ MORE- 300 யூனிட் மின்சாரம் இலவசம்..! சூரிய மின்சக்தி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அதன்படி நேற்று முன்தினம் (பிப்ரவரி 28) நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளம் விவசாயி சுப்கரன் சிங் ரப்பர் குண்டு தலையில் தாக்கி காயம் ஏற்பட்டு இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரின் மண்டை ஓட்டின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டதும், அவரது உடலில் வேறு எந்தப் பகுதியிலும் காயங்கள் இல்லை என்பதும் பரிசோதனையில் தெரியவந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளும் அவரது குடும்பத்தினரும் அவரின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்தனர். சுப்கரன் சிங் மரணத்திற்கு காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

பின்னர் உயிரிழந்த விவசாயி தந்தை அளித்த புகாரின் பெயரில் அடையாளம் தெரியாத நபர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுபாகரன் சிங் உடல் நேற்று (பிப்ரவரி 29) தகனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago