கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையை எளிதில் அடைய உதவும் வகையில் புதிய ஏற்பாடு….
டெல்லியில் கொரோன தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் அவர்களால் டி.ஒய்.சி.யே அறக்கட்டளையுடன் இணைந்து ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்துள்ளார், இந்த மாற்றியமைக்கப்பட்ட ஆட்டோக்கள் 85 முதல் 90 வரை ஆக்ஸிஜன் அளவைக் கொண்ட நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவமனைகளை அடைய உதவும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது, தற்போது 10 மாற்றியமைக்கப்பட்ட மூன்றுசக்கர வண்டிகள் மட்டுமே டெல்லியில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதன் மூலம் ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படும் லேசான அறிகுறிகளைக் கொண்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் வேகமாக மருத்துவமனையை அடைவதற்கு இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் இந்த ஆட்டோ ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் சிலின்டர் மற்றும் கிருமி நாசினி பொறுத்தப்பட்டுள்ளது மேலும் பிபிஇ உடை அணியப்பட்ட ஓட்டுனர்கள் ஆம்புலன்ஸை இயக்குவார்கள்.
மேலும் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவைகளை 9818430043 மற்றும் 011-41236614 ஆகிய இரண்டு எண்கள் மூலம் முன்பதிவு செய்யலாம். இதுபோன்ற மேலும் 20 ஆட்டோ ஆம்புலன்ஸ்களை தேசிய தலைநகரங்களின் சாலைகளில் கொண்டு வர திட்டங்கள் உள்ளது என தெறிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…