ஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம் பெற அக்டோபர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
தொலைதூரக் கல்வி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளை உயர் கல்வி நிறுவனங்கள் தொடங்குவது குறித்து கடந்த 4-ம் தேதி யுஜிசி சார்பில் அறிவிப்பு வெளியானது. அதன்படி, ஜனவரி 2021-ம் ஆண்டுக்கான படிப்புகளை உயர் கல்வி நிறுவனங்கள் தொடங்கலாம். ஆனால், முன்னதாக பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யுஜிசி) இருந்து அங்கீகாரம் பெற வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளது.
இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம் பெற அக்டோபர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2020-21 ஆம் கல்வியாண்டில் தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் கல்வி ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களும், யுஜிசியின் விதிமுறைகளின்படி தகுதி வாய்ந்த நிறுவனங்களும் அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை அக்.31 வரை நடைபெறும் என யூஜிசி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. +2 மறுதேர்வு முடிவுகள் அக். 10க்குள் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அக்.10 +2 தேர்வு முடிவுகள் வரை கல்லூரி மாணவர்கள் சேர்க்கையை நீட்டிக்க கோரிய வழக்கில் சிபிஎஸ்இ, யுஜிசி உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…