பரபரப்பு :ஜாமீன் ரத்து செய்த பெண் நீதிபதியை சேம்பரில் பூட்டிய வக்கீல்கள்..!

Published by
murugan

திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன் பாலராமபுரம் அருகே இவர் பேருந்தை  ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் சென்ற ஒருவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கு திருவனந்தபுரம் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கில் டிரைவர் மணி மற்றும் ஒரு சாட்சியிடம் விசாரணை நடத்தப்பட இருந்தது.
நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கும் முன் டிரைவர் மணி அந்த சாட்சியிடம் தன்னை யாரென்று தெரியாது என கூற வேண்டும் என மிரட்டியுள்ளார். இந்த வழக்கை மாஜிஸ்திரேட் தீபா மோகன் முன்னிலையில்  விசாரணை வந்தது.அப்போது  விசாரணையில்  அந்த  சாட்சி டிரைவர் மணி தன்னை மிரட்டியதாக கூறினார் இதையடுத்து மணியின் முன்ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து  மணி சார்பில் ஆஜரான வக்கீல் சக வக்கீல்களுக்கு தகவல் கொடுத்து உள்ளார். பத்திற்கும் மேற்பட்ட வந்த வக்கீல்கள் அங்கு வந்து மணியின் ஜாமினை ரத்து செய்ய கூடாது என கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட்டை  சேம்பரில் பூட்டி போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த மற்ற  வக்கீல்கள் அவரை மீட்டனர். இதுகுறித்து தீபா மோகன் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டிடம்  புகார் கொடுத்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

2 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

20 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

20 hours ago