SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…! இன்று மாலை முதல் டிஜிட்டல் சேவைகள் இயங்காது…!

Published by
லீனா

எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் சேவை தளங்கள் அனைத்தும், பராமரிப்பு பணிகள் காரணமாக முடக்கப்படுகிறது. 

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளது  இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து டிஜிட்டல் சேவைகள் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக தற்காலிகமாக முடக்கப்படும் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை பயன்படுத்த முடியாத நிலை காணப்படும். இந்த தகவலை எஸ்பிஐ வங்கி முன்கூட்டியே மக்களுக்கு தெரிவித்துள்ள நிலையில், மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு வங்கிப் பணிகளை முடித்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் சேவை தளத்தில் மே 7-ஆம் தேதி 22:15 முதல் 8-ம் தேதி 1:45 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், இன்று மாலை முதல் யூனோ, யூனோ லைட், இண்டர்நெட் வங்கியியல், யூபிஐ சேவை ஆகிய அனைத்தும் இயங்காது எனத் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கியை பொருத்தவரை சுமார் 85 மில்லியன் இன்டர்நெட் வங்கி வாடிக்கையாளர்களும், 19 மில்லியன் மொபைல் பேங்கிங் வாடிக்கையாளர்களும், 135 மில்லியன் யுபிஐ சேவை பயன்பாட்டாளர்கள் உள்ளனர். கடந்த மாதமும், எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் வங்கியல் சேவை தளமான யூனோ, யூனோ லைட், இன்டர்நெட் வங்கி சேவை இவை அனைத்தும் பராமரிப்பு பணிகள் காரணமாக முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

4 minutes ago

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

2 hours ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

2 hours ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

2 hours ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

2 hours ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

3 hours ago