3 தீவிரவாதிகள் காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அனந்த்நாக் மாவட்டத்தின் ஹக்கூரா (Hakoora) என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்போது மறைவிடத்திலிருந்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதையடுத்து பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்.
இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிரிழந்த தீவிரவாதிகளில் இருவர் ஈசா ஃபசிலி (Eesa Fazili) சையத் ஓவைஸ் (Syed Owais) என்று தெரிய வந்துள்ளது. தீவிர வாதிகளிடம் இருந்து ஏ.கே.47 மற்றும் கைத்துப்பாக்கிகள், கையெறிகுண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனிடையே தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து கலவரம் வெடிக்கக் கூடும் என்ற அச்சம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…