Categories: இந்தியா

கேரளாவில் நடந்த கொடூரம்! ரயிலில் சகபயணி மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு.. குழந்தை உள்பட 3 பேர் பலி!

Published by
பாலா கலியமூர்த்தி

கேரளாவில் ஓடும் ரயிலில் சகபயணி மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்ததால் பரபரப்பு.

கேரள மாநிலத்தில் ரயிலில் கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதாவது, ஆலப்புழா – கண்ணூர் சென்ற ரயிலில் சகபயணி மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே ஓடும் ரயிலுக்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சகபயணி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இரவு 10 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர் மெயின் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் டி1 பெட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தகராறு காரணமாக ஓடும் ரயிலுக்குள் சக பயணியை மர்ம நபர் தீ வைத்து எரித்ததாக தகவல் கூறப்படுகிறது. தீக்கு பயந்து ரயிலில் இருந்து குதித்த குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் நடந்த ரயில் பாதைக்கு அருகில் ஒரு குழந்தை உட்பட 3 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதில், மட்டன்னூரைச் சேர்ந்த ரஹ்மத், அவரது சகோதரியின் இரண்டு வயது மகள் மற்றும் நௌஃபல் ஆகியோர் ரயில் தண்டவாளம் அருகே சடலமாக மீட்கப்பட்டனர்.

மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தீ வைத்த மர்ம நபர் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து, ரயிலை நிறுத்தி தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் தலையிட்டு, ரயிலில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, கண்ணூர் கேபிசிசி தலைவரும், எம்.பி.யுமான கே.சுதாகரன் கடிதம் எழுதியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago