தெருவோர வியாபாரிகளுக்கு எந்தவித பிணையும் இன்றி, திருப்பி செலுத்துவதற்கு ஒரு வருட அவகாசத்தோடு மத்திய அரசின் ‘ஆத்ம நிர்பார் ‘ திட்டத்தின் கீழ் 10,000 ரூபாய் கடன் வழங்கப்படுகிறது.
பொது சேவை மையம் மூலம் ஓர் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகமானது, தெருவோர வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் மூலதன கடன் வழங்கும் ‘ஆத்ம நிர்பார் ‘ திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த கடன்தொகையானது, தெருவோர வியாபாரிகளுக்கு எந்தவித பிணையும் இன்றி, திருப்பி செலுத்துவதற்கு ஒரு வருட அவகாசத்தோடு வழங்கப்படுகிறது. இந்த கடனை பெறுவதற்கு நாடெங்கிலும் உள்ள 3.8 லட்ச பொது சேவை மையத்தில் (Common Service Center) வழிமுறை கூறப்படுகிறது.
இந்த ஆத்ம நிர்பார் திட்டத்தின் மூலம், தெருவோர வியாபாரிகளை இணைக்க முடியும் என கூறப்படுகிறது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக இணைச்செயலாளர் சஞ்சய் குமார் கூறுகையில், ‘ ஆத்ம நிர்பார் திட்டத்தில் இணையவழி பரிவர்த்தனைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இணைய பரிவர்த்தனை செய்பவர்களுக்கு, கேஷ்பேக் போன்ற சலுகைகளும் வழங்கப்படும். என தெரிவித்தார்.
மேலும், ‘ இதுவரை 2 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அதில் 50,000 பேருக்கு கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும். ‘ அவர் குறிப்பிட்டார்.
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…