சமூக இடைவெளியைக் கடைபிடிக்க மூங்கில் குச்சிகளை வைத்து வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமணம்..!

சத்தீஸ்கரில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க மணமக்கள்,மூங்கில் குச்சிகளை வைத்து மாலையை மாற்றிக்கொண்டு வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.எனவே,கொரோனா பரவாமலிருக்க முகக்கவசம் அணிதல்,தடுப்பூசி போட்டுகொள்ளுதல் மற்றும் சமூக இடைவெளியைக் கடைபித்தல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,சத்தீஸ்கிராவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர்,கொரோனா தொற்று பரவும் இந்த கடுமையான சூழலில் திருமணம் செய்து கொண்டனர்.அதே நேரத்தில்,சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக தங்களுக்கு இடையில் சிறிது இடைவெளியைப் பின்பற்றி மூங்கில் குச்சிகளைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் திருமண மாலைகளை மாற்றிக்கொண்டனர்.இத்திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.
#कोरोना में शादियां सफलतापूर्वक संपन्न कराने के लिए इवेंट मैनेजर्स को क्या क्या जुगाड़ू समाधान निकालना पड़ता है…. pic.twitter.com/2WOc9ld0rU
— Dipanshu Kabra (@ipskabra) May 2, 2021
இதனையடுத்து,சத்தீஸ்கர் மாநில கூடுதல் போக்குவரத்து ஆணையர் தீபன்ஷு கப்ரா இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கூறியதாவது,”கொரோனா தொற்றுக்கு மத்தியில் அரசின் நெறிமுறைகளுக்கு ஏற்ப திருமணங்களை நடத்துவதற்கு திருமண வீட்டார் வினோதமான புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகிறார்கள்”,என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025