Categories: இந்தியா

சத்தீஸ்கரில் சூதாட்டம்.. ராஜஸ்தானில் சிவப்பு டைரி.! காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றசாட்டு.!

Published by
செந்தில்குமார்

இந்த ஆண்டு நடைபெறுகிற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், முதல் கட்டமாக மிசோரம் மற்றும் சத்தீஸ்கரில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கரில் மட்டும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குபதிவில் 70.87% வாக்குகள் பதிவானது.

அதேபோல, மிசோரம் மாநிலத்தில் 75.88% வாக்குகள் பதிவானது. இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது. இதே நாளில் 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்திலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் தாமோவில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

Assembly Election 2023: சத்தீஸ்கர், மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..!

இந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இன்று உலகம் முழுவதும் இந்தியாவை புகழ்ந்து பாடுகிறார்கள். இந்தியாவின் சந்திரயான்-3 எந்த நாடும் எட்டாத இடத்தை அடைந்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாடு அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. நமது விளையாட்டு வீரர்கள் ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளை படைத்து வருகின்றனர்.” என்று புகழ்ந்து கூறினார்.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறார் என காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. ஏழைகளின் பணத்தைப் பிடுங்குவதும், மோசடிகளில் ஈடுபடுவதும், நாற்காலிக்காக சமுதாயத்தைப் பிரிப்பதும் காங்கிரஸ் தான். காங்கிரசுக்கு ஒரு மாநிலம் மற்றும் நாட்டின் வளர்ச்சி முக்கியமில்லை.”

“சத்தீஸ்கரில் சூதாட்டமும், ராஜஸ்தானில் காங்கிரஸின் ரெட் டைரியும் உள்ளது. கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ், பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. 2018 ஆம் ஆண்டில், அவர்கள் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதாக உறுதியளித்தனர், ஆனால் விவசாயிகள் 15 மாதங்கள் காத்திருந்தனர், இன்னும் எதுவும் செய்யப்படவில்லை.” என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவ வீரர் உயிரிழப்பு.!

உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…

19 minutes ago

ஜம்மு – காஷ்மீர் பகுதிகளுக்கு போகாதீங்க! அமெரிக்கா முக்கிய எச்சரிக்கை!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

37 minutes ago

அடுத்த அதிரடி… பாகிஸ்தானின் ‘X’ பக்கம் இந்தியாவில் முடக்கம்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,…

48 minutes ago

பஹல்காமில் நடந்தது என்ன? ”எங்களுக்கு உயிர் பயம் வந்துவிட்டது” – தப்பிய சுற்றுலாப் பயணிகள் உருக்கம்.!

சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…

1 hour ago

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்.!

காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…

2 hours ago

என்னை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறாங்க! போலீசில் புகார் கொடுத்த கவுதம் கம்பீர்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…

2 hours ago