#Breaking : நவம்பர் 12ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல்.!

Default Image

இமாச்சல பிரதேசத்தில் வரும் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

வரும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்ட பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும்.

வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி தேதி அக்டோபர் 25ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 27ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை செய்யபடும். அக்டோபர்  29ஆம் தேதி வேட்புமனு திரும்ப பெற கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 12 தேர்தலில் வாக்குகள் பதியப்பட்டு, டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள்  அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டைசி நாள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்