Categories: இந்தியா

Assembly Election 2023: சத்தீஸ்கர், மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..!

Published by
செந்தில்குமார்

சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய இரண்டு மாநிலங்களில், இன்று சட்டமன்றத் தேர்தல் தொடங்கி, வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் முதல் கட்டமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் 90 தொகுதிகளில், 20 தொகுதிகளில் மட்டுமே இன்று தேர்தல் தொடங்கி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதே போல மிசோரத்திலும் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு  நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக சத்தீஸ்கரில் 20 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தமாக 5,304 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 1276 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்கரில் உள்ள தேர்தல் நடைபெறும் பல தொகுதிகள் நக்சல் பாதித்த பஸ்தார் பிரிவில் உள்ளதால், சத்தீஸ்கரில் உள்ள 10 தொகுதிகளில் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. அப்போது, சத்தீஸ்கரில் 59.19% வாக்குகள் பதிவானது.

மேலும், மீதமுள்ள கைர்கர், டோன்கர்கர், ராஜ்நந்த்கான், டோங்கர்கான் உள்ளிட்ட 10 தொகுதிகளில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாக்குப்பதிவு என்பது நிறைவடைந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரப்படி, முதல் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி, சத்தீஸ்கரில் 70.87% வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதேபோல, மிசோரம் மாநிலத்தில் மாலை 3 மணி அளவில் 69.86% வரை வாக்குகள் பதிவாகி இருந்தது. இப்போது 5 மணி நிலவரப்படி, 75.88% வாக்குகள் பதிவாகியுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

8 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

9 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

9 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

9 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

10 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

11 hours ago