வெள்ள நிவாரண முறையீடு குறித்து போலி பேஸ்புக் பதிவை வெளியிட்ட அசாம் பல்கலைக்கழக மாணவர் கைது.!

Published by
Ragi

அசாம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் முதலமைச்சர் வழங்கிய வெள்ள நிவாரண முறையீடு குறித்து போலி பதிவை வெளியிட்டதால் கைது செய்யப்பட்டார்.

கடந்த சில வாரங்களுக்கு மேலாக அசாம் மாநிலத்தில் பெய்து வரும் மழையால் 24 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கௌகாதி பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசத்தின் இரண்டாவது செமஸ்டர் படிக்கும் டிப்ஜோதி கோகோய் என்ற மாணவன் தனது பேஸ்புக் பக்கத்தில் போலி பதிவு ஒன்றை பதிவிட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்.

அசாம் முதலமை‌ச்ச‌ர் சர்பானந்தா சோனோவால் வெள்ள நிவாரணத்திற்காக பணத்தை நன்கொடையாக வழங்கும் முறையீட்டை குறித்து போலி பதிவு ஒன்றை பேஸ்புக் கணக்கில் மாணவன் ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்ததை அடுத்து, அந்த வெள்ள நிவாரண முறையீடு கடந்தாண்டு செயல்படுத்தப்பட்டது என்றும், இது டிஐபிஆர் வெளியிட்ட செய்திக் குறிப்பு என்றும் எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு போர்ட்டலின் ஆசிரியர் அனிர்பன் ராய் தலைமை செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணாவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

அதன்படி மக்கள் தொடர்பு இயக்குநரகம்(டிஐபிஆர்), மாணவனின் பதிவு போலி என்று அறிவித்தது. அதனையடுத்து அந்த மாணவனை போலீசார் கைது செய்து, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். ஏற்கனவே மாணவன் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கு இடமில்லை? திமுக எம்.பி பரபரப்பு குற்றசாட்டு!

தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கு இடமில்லை? திமுக எம்.பி பரபரப்பு குற்றசாட்டு!

திருச்சி : தமிழ்நாடு அரசு PM Shri திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை அளிக்க முடியும்…

26 minutes ago

மழைக்கு வாய்ப்பு உண்டா? ‘அடுத்த 6 நாட்களுக்கு இதுதான் நிலைமை ‘ – வானிலை மையம் அப்டேட்.!

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.17)…

58 minutes ago

பாஜக போராட்டத்திற்கு விசிக வரவேற்பு! திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை…

2 hours ago

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

2 hours ago

முதல் குற்றவாளி மு.க.ஸ்டாலின், 2ஆம் குற்றவாளி செந்தில் பாலாஜி! அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…

3 hours ago

வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை…. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…

3 hours ago