அசாம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் முதலமைச்சர் வழங்கிய வெள்ள நிவாரண முறையீடு குறித்து போலி பதிவை வெளியிட்டதால் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில வாரங்களுக்கு மேலாக அசாம் மாநிலத்தில் பெய்து வரும் மழையால் 24 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கௌகாதி பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசத்தின் இரண்டாவது செமஸ்டர் படிக்கும் டிப்ஜோதி கோகோய் என்ற மாணவன் தனது பேஸ்புக் பக்கத்தில் போலி பதிவு ஒன்றை பதிவிட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்.
அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் வெள்ள நிவாரணத்திற்காக பணத்தை நன்கொடையாக வழங்கும் முறையீட்டை குறித்து போலி பதிவு ஒன்றை பேஸ்புக் கணக்கில் மாணவன் ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்ததை அடுத்து, அந்த வெள்ள நிவாரண முறையீடு கடந்தாண்டு செயல்படுத்தப்பட்டது என்றும், இது டிஐபிஆர் வெளியிட்ட செய்திக் குறிப்பு என்றும் எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு போர்ட்டலின் ஆசிரியர் அனிர்பன் ராய் தலைமை செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணாவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.
அதன்படி மக்கள் தொடர்பு இயக்குநரகம்(டிஐபிஆர்), மாணவனின் பதிவு போலி என்று அறிவித்தது. அதனையடுத்து அந்த மாணவனை போலீசார் கைது செய்து, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். ஏற்கனவே மாணவன் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுடன் பயனர்கள் தொடர்பு…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…