நாடாளுமன்ற மக்களவையில் தண்ணி அவதூறாக பேசிய அசம்கான் மன்னிப்பு கேட்டாலும் நான் விட மாட்டேன் என்று மக்களவை துணை சபாநாயகர் ரமாதேவி தெரிவித்துள்ளார்.
கடந்த 25ம் தேதி மக்களவையில் முத்தலாக் தடை மசோதா விவாதம் நடந்தது. சபாநாயகர் இருக்கையில் எம்.பி ரமாதேவி அமர்ந்து அவையை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, அவையில் பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.பி யான அசம்கான் , சபாநாயகரை அவதூறாக பேசினார். இதற்க்கு உடனடியாக பெண்.எம்.பி களான நிர்மலா சீதாராமன், ஷமிருதி ராணி மற்றும் கனிமொழி உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். அசம்கான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.
இந்நிலையில், நேற்று அவையில் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அசம்கான் மீது நடவடிக்கை எடுக்க அனைவரிடமும் கருத்து கேட்க தொடங்கினர். மேலும், அசம்கான் அவையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து, இன்று பேசியுள்ள துணை சபாநாயகர் ரமாதேவி, அசம்கான் மன்னிப்பு கேட்டாலும் நான் அவரை மன்னிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இது போன்று அவையில் அவதூறாக பேசுவது நாகரிகமற்ற செயல் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…