அசாமில் வெள்ளத்தில் மூழ்கி மேலும் 3 பேர் பலி – உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 133 ஆக உயர்வு!

Default Image

அசாம் வெள்ளத்தில் மூழ்கி மேலும் 3 பேர் உயிர் இழந்துள்ளதால், வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 133 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக அனைவரையும் வாட்டி வதைக்கும் நிலையில்,  தற்பொழுது இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களில் வெள்ளம் நிலநடுக்கம் ஆகிய பேரிடர்களும் ஏற்பட்டு வருகின்ற நிலையில், அசாம் மாநிலத்தில் அதிகளவு மழை பொழிவால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளப்பெருக்கில் 130 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்பொழுது பார்பேட்டா, கோக்ராஜர் மற்றும் கம்ரூப் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஒவ்வொருவர் என்ற கணக்கில் தற்பொழுது மேலும் மூவர் நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்