அசாம் வெள்ளம்: 20 பேர் உயிரிழப்பு..23 மாவட்டங்களில் 9.26 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்.!

Published by
கெளதம்

அசாமில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 23 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.

கடந்த வாரம் தேமாஜி, உதல்குரி, கோல்பாரா மற்றும் திப்ருகார் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது, மே 22-ல் நிலச்சரிவில் மேலும் 23 பேர் கொல்லப்பட்டதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்  தகவல் தெரிவித்துள்ளனர்.

“வெள்ளத்தால் 9.26 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 68,806 ஹெக்டேர் பயிர் பகுதிகள் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 193 நிவாரண முகாம்களில் சுமார் 27,308 பேர் தஞ்சம் புகுந்தனர்” என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

இதுவரை 2,49,288 வீட்டு விலங்குகள் மற்றும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் வெள்ளநீரால் அடித்து செல்லப்பட்டது என தகவல் வெளியானது. இந்த வெள்ளத்தில் இறப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

தேசிய பேரிடர் படை, அஸ்ஸாம் மாநில பேரிடர் படை வீரர்கள், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கவதற்கும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அசாம் வெள்ள நிலைமை குறித்து முதலமைச்சர் சர்பானந்தா சோனோவலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவாதித்து, பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு சம்பவங்கள் குறித்து விசாரித்தார்.

 

Published by
கெளதம்

Recent Posts

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

6 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

7 hours ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

8 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

10 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

10 hours ago

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

11 hours ago