ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கு – குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் என நீதிமன்றம் தீர்ப்பு …!

Published by
Rebekal

ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் தான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா எனும் ஆசிரமத்தில் அதன் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் என்பவர் இரண்டு துறவி பெண்களை பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2002ஆம் ஆண்டு இது குறித்த உண்மையை பத்திரிக்கையில் புலனாய்வு செய்து வெளியிட்ட சத்ரபதி என்பவர் 2002 ஆம் ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இதனை அடுத்து சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹிம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், கடந்த 2002 ஆம் ஆண்டே தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் என்பவரும் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.  ஆசிரமத்தில் நடக்கக்கூடிய முறைகேடுகள் குறித்து எழுத படக்கூடிய பத்திரிகையான பூரா சச் என்பதன் பின்னணியில் ரஞ்சித் சிங் இருந்ததால் தான் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் குர்மீத் ராம், கிருஷ்ணலால், ஜஸ்பீர் சிங், சப்தில் சிங், இந்திரசேனா  உட்பட பலர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ரஞ்சித் சிங்கை கொன்ற வழக்கில் ராம் ரஹீம் மற்றும் நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவர்களுக்கான தண்டனை என்ன என்பது குறித்து அக்டோபர் 12-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

11 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

36 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

49 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

1 hour ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

1 hour ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago