திடீரென ராஜஸ்தான் ஆளுநரை சந்தித்த முதல்வர் அசோக் கெலாட்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் , துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் ஆகிய இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இதனால், சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் தனியே முகாமிட்டுள்ளார். சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அசோக் கெலாட் அரசு முயற்சி செய்து வருகிறது. இதனால், ராஜஸ்தானில் அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதைக்குரிய சந்திப்பு என்று கூறப்பட்டாலும், அசோக் கெலாட்டுக்கு ஆதரவளிக்கும் ராஜஸ்தான் எம்.எல்.ஏக்களின் பட்டியலையும் , தனக்கு ஆதரவளித்த கட்சிகளின் பட்டியலையும் கெஹ்லாட் ஒப்படைத்தார் என கூறப்படுகிறது.
அசோக் கெஹ்லோட்டுக்கு 102 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இது அவரது ஆட்சியை காப்பாற்ற தேவையான எண்ணிக்கையை விட 1 அதிகம் உள்ளது என கூறப்படுகிறது. கெஹ்லோட் மற்றும் மிஸ்ரா இடையேயான சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது என கூறப்படுகிறது.
மேலும், கொரோனா கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது பேசியதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…