ஆர்யன் கான் ஜாமீன் : 14 பிணை நிபந்தனைகள் விதிப்பு …!

Published by
Rebekal

ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள ஆர்யன் கானின் ஜாமீன் மீது 14 நிபந்தனைகளை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொகுசு கப்பல் போதை விருந்து தொடர்பாக நடிகர் ஷாருக்கானின் மகன் உள்ளிட்ட சிலரை அக்டோபர் 3 ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 8 ஆம் தேதி முதல் ஆர்தர் ரோடு சிறையில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என இரண்டு முறை ஆர்யன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இரண்டு முறையும் இவரது ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதன்பின் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மூன்றாவது முறையாக மும்பை ஐகோர்ட்டில் இவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்ட மும்பை ஐகோர்ட் ஆர்யன் கானுக்கு 28 ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. மேலும், இந்த ஜாமீன் மனு மீதான 14 நிபந்தனைகளையும் நேற்று மும்பை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி ஆர்யன் ஒரு லட்சம் மதிப்பிலான உத்தரவாதம் மற்றும் அதற்கு இணையாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பிணை செலுத்தி ஜாமீன் பெறலாம்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடாது. மேலும் வழக்கில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்களுடன் தொடர்பில் இருக்க கூடாது. இதே போன்ற குற்றங்களில் மீண்டும் ஈடுபடக்கூடாது. சாட்சிகளை கலைக்கவோ, அழிக்கவோ முயற்சி செய்யக்கூடாது. சிறப்பு நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து மீடியாக்களில் அறிக்கை வெளியிடக் கூடாது.

போதை பொருள் தடுப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதி அனுமதி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. மும்பையை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றாலும் கூட விசாரணை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் அதற்கான காரணத்தையும் அறிவிக்க வேண்டும். போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நண்பகல் 11 முதல் 2 மணி வரை ஆஜராக வேண்டும்.

நீதிமன்ற விசாரணையின் பொழுது ஒவ்வொரு நாளும் ஆஜராக வேண்டும். விசாரணை நடக்கும் பொழுதெல்லாம் ஆஜராக வேண்டும். விசாரணையை தொடங்கிய பின்பு அதனை தாமதப்படுத்தக் கூடாது. நீதிமன்றத்தில் நடவடிக்கைக்கு பாதகமான செயல்களில் ஈடுபடக் கூடாது. மேலும் இந்த விதிமுறைகளில் ஏதாவது மூன்று விதிகள் மீறப்பட்டால் ஜாமீனை ரத்து செய்ய சிறப்பு நீதிமன்ற அதிகாரிகள் நாடலாம் என அந்த நிபந்தனைகளில் கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…

31 minutes ago

திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?

டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…

55 minutes ago

KKR vs LSG : டாஸ் வென்ற கொல்கத்தா! பேட்டிங்கிற்கு தயாரான லக்னோ!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…

1 hour ago

ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? சட்டப்பேரவையில் சிரிப்பலை கேள்வி!

சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…

2 hours ago

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…

2 hours ago

மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

2 hours ago